Sunday 2 May 2010



மேதினத்தில் சபதம் எடுப்போம்



இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தால் உற்சாகத்துடன், உவகை பொங்க கொண்டாடப்படும் ஒரு நாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என தனித்தனி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டு ஆனால் அனைத்து மத உழைப்பாளி மக்களும் கொண்டாடும் ஒரே தினம் மேதினம் மட்டுமே. அடையாளபூர்வ கொண்டாட்ட தினமல்ல இது. உரிமைகளை பெற்ற தினம். மனிதன் மிருகமாக வேலைவாங்கப்பட்ட நாட்களில் அவர்களது மனித உணர்வுகளை மீட்டெடுக்க புரட்சிகர சக்திகள் ஏற்படுத்திய போராட்டத்தின் விளைவு மேதினம். சிக்காகோ நகர் வீதிகளில் சிந்திய போராளிகளின் உதிரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று பரிசு இந்த தினம்.





ஆனால் 80 ஆண்டுகால உழைபாளிகளின் உதிரத்தால் பெறப்பட்ட உரிமைகள் மீண்டும் அடகு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை சூரையாட ஏகாதிபத்திய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆயுதத்தால் அல்ல சந்தையால் லாபத்தை கொழித்திட நமது நாட்டில் கடைவிரித்துள்ளன. அவர்களுக்கு குறைந்த கூலியில் தொழிலாளிகளை கொடுக்கும் சந்தையாக  இருப்பதால்தான் பலநாட்டு கம்பெனிகள் இங்கு வருகின்றன. அவர்களுக்கு உரிமைகளை கேட்டு போராடும் மனிதர்கள் இருக்ககூடாது, அவர்களை ஒன்றினைக்கும் சங்கங்கள் இருக்கக்கூடாது எனவே தாங்கள் விரும்பும் அரசாங்கங்களை அவர்கள் நிறுவுகின்றனர். .





கண்ணிதுறை ஊழியர்களுக்கு 8 மணிநேரம் என்றால் என்னவென்று தெரியாது. ஒப்பந்த கூலி தொழிலாளிகளுக்கு இந்த நேரம் கிடையாது,அந்நிய பண்ணாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் வைக்கவே உரிமை கிடையாது. அங்குள்ள உள்நாட்டு தொழிலாளிகளை அடித்து நொறுக்க நமது காவல்துறை விசுவாசத்துடன் பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வேலை செய்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலமிடப்படுகின்றன. சமூக பாதுகாப்பான வேலை என்பது கானல் நீராக மாறி வருகிறது. அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க நமது அரசாங்கங்கள் அலைபாய்கின்றன.





மேதினத்தில் சபதம் எடுப்போம். உரிமைகளை பாதுகாக்க! மக்களை திரட்டுவோம், மக்கள் போடராட்டத்தை தவிர மிகப்பெரிய ஆயுதம் எதுவுமில்லை.





வரலாறு... 


(தோழர் முத்துக்கண்ணன் வலைதளத்திலிருந்து)


1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது.





1820 முதல் 1830 களில் பில்டெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன் வைத்தது, அதே நகரில் 1827ல் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் இந்த கோரிக்கைக்காக வேலைநிறுத்தத்தை நடத்தியது. இதன்பின்பு தான் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக பார்க்கப்பட்டது.





நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் எகிப்திய அடிமைகளை விட கேவலமான முறையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். 1837ல் வேன்பியுரன் தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோஷத்தை முன் வைத்தனர்.





8 மணி நேர வேலைக்கான கோஷத்தை முன் வைத்து வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். 1884 களில் அமெரிக்காவில் உருவான 8 மணி நேர இயக்கம் தான் மேதினம் உருவாக காரணமாக அமைந்தது. இதற்கு ஒரு தலைமுறை முன்பே இக்கோரிக்கைக்காக அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற 1861-62 காலத்தில் தேசிய தொழிற்சங்கம் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க ஸ்தாபனமாக போராடியது.





1866ல் தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மகாநாடு அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நாட்டின் உழைப்பு சக்தியை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி போராட தீர்மானிக்கிறோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.





அதனால் தான் இரண்டாவது இன்டர் நேஷனல் 1889ல் பாரிஸில் நடைபெற்ற போது மே முதல் நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்தின் மூலம் கொடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கோரிக்கை 8 மணி நேர வேலைக்கான போர் குரலாக ஒலிக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1884 சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் மகாநாட்டில் 1886 மே முதல் நாளை 8 மணி நேர வேலைக்கான தினமாக அறிவிக்க தயாரிப்பு பணிகளை துவக்கிடுவது என்ற அறைகூவலுக்கு இணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த மூன்றாண்டுகளும் போராட்ட களமாக காட்சி அளித்தது. சாலை, ரயில்வே, நகராட்சி, இயந்திரத் தொழிலாளர்கள், பென்சில்வேனியா சுரங்க தொழிலாளர்கள் என பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.





1873 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவும், வேலை இல்லா திண்டாட்டமும், மக்களின் துன்பமும் குறைவான வேலைநாளுக்கான போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. 1881ல் 500 வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது 1886ல் 11562 ஆக உயர்ந்தது. வேலைநிறுத்தத்தின் மையமாக சிக்காகோ நகரமும், இதர பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பங்கேற்றது.





1886 மே 1ம் தேதியன்று சிக்காகோ நகரம் தனது வரலாற்றில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கி தங்களது மாபெரும் வர்க்க ஒற்றுமையை காட்டிய காட்சியை கண்டது. சிக்காகோ நகரம் மட்டுமல்ல உலகமே கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் மற்றும் அரசு எந்திரம் இணைந்து தொழிலாளர்களை கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியது. அமைதியான முறையில் போராட்ட களத்தில் நின்ற தொழிலாளர்களை காவல்துறை சுற்றி வளைத்து தாக்கியது. அதில் ஏற்பட்ட கலவரத்தையட்டி பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர். தொழிற்சங்க தலைவர்கள் பலர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர். அவர்களின் அந்த மகத்தான தியாகமே மேதினத்தை தொழிலாளர்களின் உரிமை தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டித்து வருகிறது.

Friday 30 April 2010



சுறா விமர்சனம்





விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான  ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்... !







விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி xxxx வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்...இப்ப சொல்றேன்.. இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு...எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...!







டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்...நீங்க மனுசனா சார்...இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை  மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த  எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா...  என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர  புடுங்கி வெச்சிருக்கீங்க...உனக்கு  சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட...ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க...தயவு செஞ்சு போயிருங்க...உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க...மறுபடியும் சொல்றேன்...நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க...!







மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும்  உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!







என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள...போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!

Sunday 11 April 2010



யூ ட்யூபின் புதிய வடிவம்






பீட்டா வெர்சனுக்கு மாறிய இரண்டு மாதத்தில் யூ ட்யூப் வீடியோ தளத்தின்
புதிய வடிவம்  முழுமையாக பார்வைக்குத் தயாராகியுள்ளது. ஜனவரியின்
பிற்பகுதியிலே புதியவடிவத்துக்கு மாறத் தொடங்கி இருந்த இந்த வீடியோ
பகிர்தல் தளமானது தற்போது சீரான வடிவத்தில் பயனாளர்கள் பயன்படுத்த
முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வருடமாக தயாரிக்கப்பட்ட இந்த புதியவடிவமானது இரண்டு நோக்கங்களை
பூர்த்திசெய்வதாக இருக்கிறது. முதலாவது, ’முன்னெப்போதும் விட
நுட்பமனதும், தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டதுமான பயனர் செயல்பாட்டின்
எளிமை’.  இரண்டாவது, தளத்திற்கு வருகை புரிபவர்களின் நீடித்த
பயன்பாடுக்கு இது உத்திரவாதம் அளிக்கக்கூடியது மற்றும் அவர்களை யூ ட்யூபை
விட்டு  பிரியவிடாது செய்யக்கூடியது என்பது யாஹூ தளத்தின் வடிவமைப்பாளர்
ஜூலியன்  ஃப்ரூமர் மற்றும் மென்பொருளாளர் இகோர் கோஃப்மன் இருவரின்
கருத்தாகும்.

புதிய யூட்யூப் மாற்றங்கள் புதிய பயனாளர்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்த
திறமையான பயனாளர்களுக்கும் ஏற்றதாகும். மாற்றங்கள் வெளிப்படையாக
முதல்பார்வையில் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும்போது அதன் சிறப்பு
தெரியவரும்.

பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியின்  தகவல்கள் ஒரே இடமாக வீடியோ
பகுதிக்கு கீழாகக் காண்பிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு
அம்புக்குறியை சுட்டுவதனால் அறிந்துகொள்ளலாம்.


முறைப்படுத்தப்பட்ட தேடுதல்
--------------------------------------------
தொடர்புடைய காட்சிகளின் வரிசை வலது புறத்தில் தற்போது
நுட்பமாக்கப்பட்டிருக்கிறது,அதாவது அந்த காட்சிக்கு வந்து சேர்ந்த
விதத்தை தொடர்புபடுத்தியதாக அமைகிறது. தேடுதல் முறை மூலம் அந்த
காட்சிக்கு வந்திருக்கும் பட்சத்தில் அது மற்ற தேடல் வரிசைகளை காட்டுவதாக
இருக்கும். அல்லது பரிந்துரை மற்றும் ப்ளேலிஸ்ட் மூலமாக வந்திருக்கும்
பட்சத்தில் அவை போன்றவற்றையும் காட்டுவதாக இருக்கும்.

மேலும் ஒரு வீடியோவின் பயன்பாட்டுக்கு நடுவிலும் கூட தேடுதலை
தொடரமுடியும்.ஒரே நேரட்த்தில் மேலும் செயல்பட விழைபவர்களுக்கு இது
சிறப்பானது. தேடுதலுக்கான விடைகள் வீடியோவிற்கு இடர்பாடு இல்லாமல்
வலதுபுறத்தில் காண்பிக்கப்படும்.


புதிய ரேட்டிங்க் முறை
---------------------------------
ஐந்து நட்சத்திர குறியீடுகள் போன்ற முறைகள் தற்போது இல்லை. பயனாளர்கள்
‘1’ அல்லது ‘5’ என்பதை மட்டுமே பிடித்தது பிடிக்கவில்லை என தெரியப்படுத்த
தேர்ந்தெடுத்து வந்ததால் இந்த புதிய முறையில் இரண்டே இரண்டு
வாய்ப்புக்கள் தரப்பட்டிருக்கிறது. விரும்புகிறேன் அல்லது விரும்பவில்லை
என்பதை தேர்ந்தெடுக்கலாம்.விரும்புகிறேன் என்று  தேர்ந்தெடுக்கும் வீடியோ
விருப்பப்பட்டியலில் இணைந்து விடும்.

சந்தா செய்துகொள்வதற்கான  பகுதியும்  வீடியோவின் மேல்பகுதியில்
பார்வைக்கு எளிதாக இருப்பதால் சந்தா எளிதாகவும் மற்ற வீடியோக்களை
அடுத்தடுத்து பார்க்க ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

Thursday 25 March 2010


வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டு என்பதைப் போல் மத்திய ஆசியாவின் மாபெரும் வல்லரசான சீன அரசுக்கு சரியான நோஸ் கட் கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

அமெரிக்காவை தலைமையமாகக் கொண்ட கூகிள் நிறுவனத்தின் தேடல் சேவைதான் உலகத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சர்ச் என்ஜின். இதன் மூலம் எங்கோ ஒரு நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் தெருவைக்கூட துல்லியமாக காட்ட முடிகின்ற அளவுக்கு கூகிளின் ஆக்டோபஸ் கைகள் வளர்ந்துள்ளது.

தன்னுடைய எதிரியில் நிழல்கூட தனது நாட்டின் மீது படக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்து வரும் சீன தேசம் கூகுளின் இந்த சேவையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது.

கூகுளில் தட்டச்சு செய்தால் நொடியில் கேட்ட தகவல்களைக் கொட்டி விடுகின்ற ஆற்றலுக்கு சீனம் சிவப்புக் கம்பள விரிப்பு விரிக்காமல் கம்பளி போர்வையைப் போட்டு தடை விதித்தது.

`கூகுள் அனுப்பும் எந்த தகவல்களையும் தங்களது நாட்டிற்குள் தணிக்கை செய்துதான், இன்டர்நெட்டில் பார்க்க அனுப்புவோம்` என்று சீனாவின் செஞ்சேனை அரசு விதித்த கட்டுப்பாட்டை வன்மையாக எதிர்த்தது கூகிள்.

 `இது, தகவல் சுதந்திரத்தை பறிக்கும் போக்கு; இதை அனுமதிக்கமுடியாது` என்று கூகுள் நிறுவனம் கூறியது. தணிக்கை செய்யாமல், சீனாவில் இருந்து கூகுள் தன் இன்டர்நெட் சேவையை சீன மக்களுக்கு அளிக்க முடியாது என்று சீனா  மிரட்டி வந்ததோடு இல்லாமல் அதனை செயல்படுத்தியும் வந்தது. சீனாவில் இருந்து கூகுள் தகவல்கள் எல்லாம் தணிக்கை செய்வதும், இருட்டடிப்பு செய்வதும் தொடர்ந்ததை, கூகுளும் கவனித்துதான் வந்தது.
 சீனா கம்யூனிஸ்ட் ஆட்சியின் நிலைமை.. சீன தேசம் பற்றிய தகவல்கள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை, சீன பொருளாதார தடைகள், சீன கரன்சியான `யான்` மதிப்பு நிலைமை, திபெத் தலைவர் தலாய்லாமாவின் பேச்சுகள் போன்றவற்றை அவ்வப்போது கூகுள் மூலம் பல வெப்சைட்கள் வெளியிடுவதை, சீனா விரும்பவில்லை.

கம்யூனிச கட்டுப்பாட்டை மீறிய தகவல்களை அது தணிக்கை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்துதான், கூகுள் - சீன கம்யூனிச அரசு சண்டை ஆரம்பமானது. இந்த சச்சரவின்போது சீனத் தலைநகர் பீகிங்கில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் வெளிதேசத்தவர்கள் பலரையும் கண்காணிக்க ஆரம்பித்தது சீன அரசு. இந்த ஒற்றுவேலையையும் புரிந்து கொண்ட கூகுள் இதற்காகவும் சீனாவைக் கண்டித்தது. ஆனால் அசுர பலம் கொண்ட அரசு என்பதால் வேறு வழியில்லாமல் பீஜிங்கில் இருந்த தனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக் கொண்டது.

இரு தரப்பினருக்கும் முட்டல், மோதல்கள் அதிகரித்தபோது வழக்கம்போல அமெரிக்க அரசு இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு ராஜ்ஜிய ரீதியாக தலையிடும் சூழல் வந்தால் அப்போது நிச்சயம் தலையிடும் என்று சொல்லி விலகிக் கொண்டு வேடிக்கை பார்த்தது.
ஆனாலும் கூகிளுக்கு இது அறிவுசார் சொத்துரிமையின் மீது சீன அரசு தொடுத்துள்ள அடக்குமுறை என்பதாகத் தெரிய வர.. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும், முடியாமல் போய் சமீபத்தில் இரு தரப்பு உறவுகளும் முற்றிலுமாக முறிந்துவிட்டன.
தணிக்கையை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்று கூகுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஆனாலும் சீன அரசு அதனைப் பொருட்படுத்தாமல் தனது தணிக்கை முறையைக் கையாண்டதைக் கண்டு பொறுமை இழந்த கூகுள், நேற்று திடீரென சீனாவில் இருந்து கூகுள் தேடல் சேவையை நிறுத்திவிட்டது.
`சீனாவில் உள்ள மக்கள் எங்கள் சேவையை பெற விரும்பினால், தணிக்கை செய்யப்படாத தகவல்களை பெற, ஹாங்காங் சேவை மூலம் பெறலாம்` என்று அறிவித்து உள்ளது.

இனிமேல் சீனா பற்றிய தகவல்களை, படங்களை பெற, சீனாவில் உள்ளவர்கள், www.google.com.hk  என்று இன்டர்நெட்டில் முகவரியிட்டு பெறலாம்.
இந்தத் திடீர் திருப்பத்தால் ஆடிப் போயிருக்கும் சீனா, கூகுள் நிறுவனத்தின் மீது கடும் கோபம் கொண்டுள்ளது. `அமெரிக்காவை அடுத்து சீனாவில்தான் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்; நாங்கள் கூகுளுக்கு சரியான பாடம் கற்பிப்போம்` என்று சீனா கோபத்துடன் உள்ளது..
`நாங்கள் தகவல் சுதந்திரத்தை பறிக்கத் தயாரில்லை; உலகில் உள்ள மக்களுக்கு எல்லா தகவல்களும் போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்` என்கிறார் கூகுள் நிறுவனத்தின் சட்ட அதிகாரி டேவிட் ட்ரூம்மாண்ட்.

`கூகுளுக்கும், சீன அரசுக்குமான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது; இணையதள சுதந்திரத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கிறது; தணிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என்று கருதவில்லை` என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேம்மர் கூறியிருக்கிறார்.

ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட அரசுபோல் காட்சியளிக்கும் சீனாவின் கம்யூனியஸ ஆட்சியாளர்களை எதிர்த்து கூகுள் நடத்தியிருக்கும் இந்த யுத்தத்தில் வெற்றி யாருக்கு..? தோல்வி யாருக்கு..? என்பதையெல்லாம் யோசிக்க முடியாத அளவுக்கு இந்தப் பிரச்சினை வலுத்துக் கொண்டே போயுள்ளது.
ஹாங்காக்கும் சீன அரசுக்குட்பட்ட பிரதேசம்தான் என்றாலும் பல்வேறு நாட்டு மக்களும் இருக்கின்ற பகுதி என்பதால் இப்போதும் கம்யூனிஸம் முழுமையாக அங்கே நிறுவப்படவில்லை. இதனாலேயே கூகுள் ஹாங்காக்கை இப்போதைக்கு தேர்வு செய்திருக்கிறது.

ஒருவேளை சீன அரசுக்கு கூகுள் சீனாவின் ஆளுமைக்குள்ளேயே புரட்சிகர சிந்தனையோடு இருப்பது பிடிக்காது போனால் வேறு ஏதாவது ஒரு காரணத்தோடு ஹாங்காக்கை விட்டு கூகுளை துரத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

அதுவரையிலும் தற்காலிகமாக வெற்றி பெற்ற திருப்தியில் கூகுள் நிறுவனம் 

Saturday 13 February 2010

கூகுள் பஸ் (Buzz) !

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று. ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர். சரி எதற்காக இந்த கூகுள் பஸ்? இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!! இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது? எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம். வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!! அது மட்டுமல்ல? இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!! இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்? கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!! இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?

Friday 12 February 2010

வேலன்டைன் தினம்

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது. கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது. மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது. வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது. மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு . இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன. மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன. 18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது. வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார். கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம். வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.

Friday 5 February 2010

அசல் விமர்சனம்

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சரணின் அடுத்த படம் தான் அஜித்தின் 49 வது திரைப்படமான "அசல்". படத்திற்கு இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் அஜித். "படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் கதை சொல்லி நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர்". இது மாதிரி நான் எப்பதான் எழுத போறேனோ தெரியல போங்க. கதை பிரான்சில், மிகப்பெரிய பணக்காரத் தந்தையான அஜித்திற்கு 3 மகன்கள்.முதல் மனைவியின் மகன்கள் சம்பத், ராஜீவ் கிருஷ்ணா. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் இளைய அஜித். எந்த வேலையாக இருத்தலும் இளைய அஜித்திடம் கேட்ட பிறகே செய்கிறார் தந்தை அஜித். இதனால் மற்ற இருவருக்கும் இளைய அஜித்தை பிடிக்காமல் போகிறது. இளைய அஜித்தை 10 வயது வரை வளர்த்து பின்னர் பிரான்சில் உள்ள தந்தை அஜீத்திடமே ஒப்படிக்கிறார் பிரபு. தந்தை அஜித் தன் இறப்பிற்குப் பிறகு தனது சொத்து இளைய அஜித்துக்கு தான் சேர வேண்டும் என உயில் எழுதி விட்டு இறந்து விடுகிறார்.அதனால் இளைய அஜித்தை தீர்த்து விட்டு சொத்தை அபகரிக்க முயல்கின்றனர் மற்ற இருவரும். இதறகிடையில் மும்பை சேர்ந்த தாதா ஒருவன் ராஜுவை மும்பைக்கு கடத்தி சம்பத்தின் குடும்ப சொத்து முழுவதையும் தனக்கு கொடுக்குமாறு மிரட்டுகிறான். பின்னர் அஜித் பிரான்சில் இருந்து மும்பைக்கு வந்து அவரது தம்பி ராஜு கிருஷ்ணாவை காப்பாற்றுகிறார்.சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என எண்ணிய நேரத்தில், அஜித்தை சுட்டு விட்டு பிரான்ஸ் பறகிறார்கள் சகோதர்கள் . தப்பி பிழைத்த அஜித் தன்னை கொலை செய்ய என்ன காரணம் என கண்டுபிடிக்க பிரபு, பாவனா, யூகிசேது அவர்களுடன் பிரான்ஸ் போகிறார். பின்னர் தன் தம்பி இருவரையும் கொள்கிறார். சமிரா, பாவனா, பிரபு, சுரேஷ் , யூகிசேது பிரான்சில் அஜித்திற்கு நண்பராக சமிரா. இந்தியாவில் அஜித் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் பிரபு. அவர்க்கு உறவினராக பாவனா . காமடி பீசுக்கு யூகிசேது . பிரான்சில் போலிசாக வேலை செய்யும் சுரேஷ் சம்பத்திற்கு நண்பராக வருகிறார். பாடல்கள் அசல் பாடல் வெளியுட்டு விழாவில் அஜித் , பிரபு பிடிக்கும் என சொன்ன "என தந்தை", "எங்கே எங்கே " இரண்டுமே படத்தில் மிஸ்ஸிங் ..."டொட்டடொய்ய்ய்ங்...". பாடல் மட்டும் ரசிக்கும் படி படமாக்கி உள்ளார்கள்.so மற்ற பாடல்கள்? இரண்டு நாயகிகளும் அஜித் தனக்குத்தான் என் போட்டி போடுகிறார்கள். இதில் பாவனாவிற்கு சமீரா விட்டு கொடுக்கிறார். அது எப்படித்தான் முதல் பார்வையிலேயே பாவனாவிற்கு அஜித் மேல காதல் வருதோ. பிரான்சில் வரும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் உள்ளன. Result அஜித் தயவு செய்து நல்ல கதையை தேர்தெடுத்து நடிங்க . இந்த கதைக்காகவா 6 மாசம் Wait பண்ணிங்க. ரமணா, வில்லன் படத்துக்கு திரைக்கதை பண்ணிய யூகி சேது இந்த படத்துல சொதபிட்டாறு . படத்துல அஜித் நல்லா 'Ramb ஷோ' பண்ணி காட்றாரு . அதுக்காகவாவது இந்த படத்தை ஒரு தடவை பாருங்கன்னு நான் சொன்னா, நீங்க என்னை என்ன சொல்வீங்க? படத்தில இருக்கிற ஒரே நல்ல விஷயம், படம் பில்லா மாதிரி ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அதனால இந்த படத்தை "அசல்" அஜித் ரசிகர்கள் கொண்டாடலாம்..

Friday 29 January 2010

"3G" நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள்...

“3G” நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள், என்கிறார்களே - 3G என்றால் என்னவென்று பார்ப்போம். கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே - வயர்லெஸ் டெலிஃபோன் - பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’. உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம். GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்ஃபோனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள். ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே! 1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் - நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை (ஏன், ப்ளஸ்-டூ மாணவர்கள் கூடப் போதும்!) கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள். அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா - அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!) கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?! முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!) அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்! போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது - அதனால்தான் வந்தது 3G. 3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, என் போன்ற பொறியாளர்களுக்காக சில கணக்குகள் - 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு - ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!! இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) - எல்லாம் உள்ளங்கையிலேயே! ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது. நீங்கள் நினைக்கலாம் - நான் இந்தக் கட்டுரையை 3G நெட்வொர்க் ஃபோனில்தான் தட்டச்சு செய்கின்றேன் என - இல்லை! முக்கியமான காரணம், இன்னும் 3G நெட்வொர்க் ஃபோன்கள் சற்று விலை அதிகமாகவே விற்கின்றன. சரவணா ஸ்டோர்ஸில் ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் கிடைக்காது. இதில் நிறைய லைசென்ஸ் தகராறெல்லாம் வேறு உள்ளது. எல்லாப் பிரச்சினைகளையும் மீறி ஒரு வழியாக நம் நாட்டில் 3G ஃபோன்கள் வந்துவிட்டன. வரவேற்போம்! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் போராடி இது எல்லா நாடுகளிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றார்கள். முன்பு சொல்லியிருந்தது போல, ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக லைஸென்ஸ் பெற வேண்டும். சரி, ஏழெட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது இப்பொழுது பிரபலமாகி விட்டது. 4G நெட்வொர்க்குகளைப் பற்றிய ஆராய்ச்சி தீவிரமாக நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரே வரியில் அதைப் பற்றிச் சொல்கிறேன்! ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருப்பதை நாம் அறிவோம்! அது போல, ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருந்தால் எப்படி இருக்கும்!! சிந்தனை செய்தால், எனக்கு தலை எல்லாம் சுற்றுகிறது! இன்னும் நான்கைந்து வருடங்களில் 4G பற்றிய விரிவான கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கலாம்

Thursday 21 January 2010

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' எனும் புதிய திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். வழக்கமான சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி, மிக மிக வேறுபட்ட அனுபவத்தையும், நுண்ணுணர்வுகளால் புரிந்து கொள்ளப்பட்டு எழுத்தால் பகிரப்பட முடியாத உணர்வுகளையும் இந்தப் படம் எனக்கு தந்தது. அத்துடன் படத்தின் மையக்கருத்தும், படத்தின் முடிவும் முள்ளிவாய்க்காலுடன் உறைந்து போயிருக்கும் ஈழப்போராட்டத்தைப் பற்றிய நுணுக்கமான ஒரு பதிவாகவும், அதன் எதிர்காலப் போக்குப் பற்றிய நூலிழை எதிர்வு கூறலாகவும் அமைந்து இருக்கின்றது இந்தக் குறிப்பில் ஆயிரத்தில் ஒருவனின் கதையை எழுதக்கூடாது என்று உத்தேசித்து ஆரம்பிக்கின்றேன். 1. போரும் அமைதியும் எனும் ரொல்ஸ்ரோயின் காவியத்தின் மையக்கருத்து 'போர் என்றும் ஓய்வதில்லை' என்றே சொல்வேன். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கள் ஒரு நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். ஆனால் யுத்தம் என்பது மானுட வரலாற்றினை முன்னோக்கவும், இழுத்துக் கட்டி வைத்திருக்கவும் என்று எப்பவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. போரற்ற வாழ்வு எது? போரற்ற தமிழன் வரலாறு தான் எது? 2. தஞ்சையில் பாண்டிய மன்னனால் சோழ பேரரசு அழிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட பேரரசில் இருந்து தப்பிக் கொண்ட இளவரசனும் இன்னும் சிலரும் பாண்டிய பேரரசின் சின்னமான சிலையொன்றுடன் தப்பி, தேசங்கள் கடந்து யாருமற்ற தீவொன்றில் மறைந்து விடுகின்றனர். தான் தன் பரம்பரை எல்லாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை விட்டு அகல்கின்றான் சோழ பேரரசன். அந்தச இளவரசனையும், சின்னத்தையும் தேடி பாண்டிய பேரரசின் பரம்பரை பல நூற்றாண்டுகள் கடந்தும் வெறி கொண்டு அலைகின்றது. நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே *************** அடிமையாக வாழ்ந்த தமிழன், ஈழம் எனும் சிறு பகுதியில் மானமுடன் வாழ ஆசைப்படுகின்றான். வரலாறு சப்பித்துப்பிய எச்சமாய் போனவன் தனக்கென்ற தேசம் பற்றி கனவு கொண்டும், என்றாவது ஒரு நாள் பெரும் தேசம் புகுவான் என்றும், தன் எல்லா சக்தியும் கொண்டு சிறு தேசம் கட்டி, உயிரை அடை காக்கின்றான். எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலம் எங்கும் மீண்டும் தன் புலிக்கொடி பறக்கும் என்று காத்திருக்கின்றான் ***************** பாண்டிய பரம்பரை நெஞ்சில் வஞ்சினம் கொண்டு சோழனை தேடுகின்றது. தப்பிய இளவரசனின் பரம்பரையால் என்றாவது தன் பேரரசிற்கு ஆபத்து என்று வெறி கொண்டு அலைகின்றன. ஆண்டுகள் மாறுகின்றன, களம் மாறுகின்றது, வரலாறும் மாறுகின்றது. ஆனால் தாய் நிலம் இழந்தவனும், அபகரித்தவனும் மாறும் களம் தமக்கானதாய் கனிய காத்திருக்கின்றன. 800 ஆண்டுகள் கழிந்தும் போர் மட்டும் ஓயாமால் வெவ்வேறு களங்களினூடும், தளங்களினூடும் பயணம் செய்கின்றது. நிலம் இழந்தவனும், தன் இன மானச் சின்னத்தை எதிரியிடம் இழந்தனும் வெறி கொண்டு தம் பக்க நியாயங்களுக்காக காத்திருக்கின்றன "தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோளே.. அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே.. அழாதே எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே.. அழாதே" சோழ பரம்பரை காத்திருக்கின்றனர்... தாங்கமுடியா துயர்களை தாங்கி விடிவு ஒன்றுக்காய் மட்டுமே ஒரு சிறு நிலமதில் உயிர் சுமக்கின்றனர். அந்த நிலத்தின் சட்டங்கள் வேறு, நியாயாதிக்கங்கள் வேறு, பண்பாடு வேறு. ஆனால் அனைத்தும் மீண்டும் தம் சுதந்திர வாழ்வு பற்றிய ஒற்றைப் புள்ளியில் சுழல்கின்றன. பாண்டியனின் புதிய பரம்பரையின் ஒரு வித்து சோழனின் இடம் பற்றி அறிகின்றது, திட்டமிடுகின்றது, தேடுகின்றது, தேடி இறுதியில் பல பொறிகள் (Traps)கடந்து அவனை வீழ்த்த முனைகின்றது, 800 வருடங்களாக காத்திருந்த வெறியும், நிலம் மீள காத்திருந்த கனவும் சந்திக்கின்றன. அனைத்தையும் இழந்த சோழ பரம்பரை தனக்கிருக்கும் குறைந்த வளத்துடன் போரிடுகின்றது. ஈற்றில், ஆக்கிரம்மிப்பு வெறியும், பலமும் கொண்ட பாண்டிய பரம்பரை நவீன ஆயுதங்களின் துணையுடன் மீண்டும் சோழனை வீழ்த்துகின்றது. எவரின் உதவியும் அற்று (அல்லது ஒதுக்கி) தன் சொந்த கால்களின் பலத்துடன் மட்டுமே நின்ற சோழப்பரம்பரை மீண்டும் தோற்கின்றது. தலைமை தாங்கிய அரசன் படுகொலை செய்யப்படுகின்றான். பலர் தம் குரல்வளையை அறுத்து தற்கொலை செய்கின்றனர். பலர் சிறை பிடிக்கப்படுகின்றனர். பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். அவர்களை காக்க முனையும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் மீண்டும் அந்தப் சோழ பரம்பரையில் ஒருவனும், அவனுடன் கூடவே சிலரும் தப்பிக்கின்றனர்.. மீண்டும் சோழனின் பயணம் தொடர்கின்றது..தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது என்று அந்தப் பயணம் தொடர்கின்றது. தப்பிய அவனைத் தேடி பாண்டிய வம்சத்தின் துரத்துதலும் தொடர்கின்றது ************** முள்ளிவாய்க்காலில் இந்தத் தலைமுறையின் விடுதலை வேட்கை பலம் கொண்டவர்களால் அடக்கபடுகின்றது. ஆனால் போர் மட்டும் ஓயவில்லை. இன்னொரு களம், இன்னொரு காலம் நோக்கி நகர்கின்றது; தமிழர் தன் சுதந்திரத்தினை அடையும் வரையும் எதிரி தன் இருப்பை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவும் வரைக்கும் இந்தப் போர் ஓயப்போவதில்லை **************** 3 இப்படி ஒரு சினிமா தமிழில் இது வரைக்கும் வரவில்லை என்றே சொல்வேன். முன் பாதி முழுதும் மாயாஜாலம் நிறைந்த (தமிழர்களின் மாயாவாதம்) காட்சிகள், பின் பாதி மானுடம் முழுதும் நிரம்பி இருக்கும் உயிர் வாழ்தலுக்கான போட்டி. போர் என்பது மனித வாழ்வில் பிழைத்து இருக்க (Survival) தவிர்க்க முடியாதது. 99% அடிமை உணர்வில் ஆட்கொண்டு பணிந்து போனாலும் மிச்சம் இருக்கும் 1% சுதந்திரம் பற்றி தன்னுணர்வு கொண்டு தன் சமூக விடுதலைக்காக தொடர்ந்து போர் செய்ய முனையும் என்பதை சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் பதிவு செய்த திரைப்படம் இது. சக காலத்தில் நிகழ்ந்த பெரும் போராட்டம் ஒன்றின் உறைநிலையை (அல்லது தற்காலிக முடிவை) கருப்பொருளாக்கி சினிமா தந்த செல்வராகவன் பாராட்டுக்குரியவராகின்றார். ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் Perfection என்பது அதிசயிக்கத்தக்கது. எல்லாக் காட்சிகளிலும் Frame இற்குள் அகப்பட்ட அனைத்தும் முழுமையாக இருக்கின்றது. சின்ன சின்ன விடயங்களில் கூட அதிக பட்ச அக்கறை காட்டியிருப்பதும் உணரக்கூடியதாக இருக்கின்றது 4 ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை ========================================================= பி.கு 1: இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே. பி.கு 2: திரைப் படத்தின் இறுதியில், கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போது, நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

Saturday 16 January 2010

கூகுள் -சீன அரசு மோதல் உச்சகட்டம்

மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது. இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன. இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார். கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம். சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது